Tuesday, June 15, 2010

ஞானசம்பந்தர் கூறும் நிலையாமை




அல்லல்கள் நிறைந்து துக்கமுடைய வாழ்க்கையை மெய்யென்று எண்ணித் துயரச் சூழலில் சிக்கித் தவிக்கும் பர்ருடையவர்களைஎல்லாம் நோக்கி ஞானசம்பந்தப்பெருமான் அறைகூவி அழைக்கிறார்.
ஒவ்வொரு நாளும் ஆசையால் முயற்ச்சித்து இறுதியில் கிடைப்பவற்றை ஏற்றுக் கொள்ள முடியாமல் வேதனையுருகின்ர வாழ்வை விட்டுத் திருக்கோடிகா இறைவனைச் சென்று வணங்குங்கள் என்கிறார்.

" இன்று நன்று நாளை நன்றென்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டு போதுமின்" (பா.௧) என்றும்

" அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்திராது நீர்
நல்லதோர் நெறியினை நாடுதும் நடமினோ"- (பா.௨) என்றும்

"துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்" (பா.௩)

என்றும் ஞானசம்பந்தர் அருளியுள்ளமையை நோக்க மனித வாழ்வை நிலைத்த இன்பம் உடையாது எனக்கருதும் பற்றுடையவர்களுக்கு இவ்வாழ்வு நிலையாமையை உணர்த்தி இறைவநிடத்தே செல்ல ஆற்றுப்பதுத்துகிறார்.

"முன்னே நீர் செய்பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியா
தின்ன நீறிடும் பையில் மூழ்கிறீர்" (பா.௫) என்றும்

"ஏவமிக்க சிந்தையோடின்ப மேய்தலாமேனப்
பாவமேத்தனயும் நீர்செய்தொரு பயனிலை" (பா.௬) என்றும்

கூறுவதிலிருந்து துன்பம் நிறைந்த வாழ்க்கை அமைந்த காரணத்தைக் கூறுகின்றார். இதனின்று விடுபடவேண்டும் எனில் இம்மனித வாழ்க்கையைக் கருவியாக கொண்டு முயற்சி செய்ய வேண்டும். மனித வாழ்வு பிணி, மூப்பு, இறப்பு போன்றவைகளால் துயருற்று வாழும் நிலை தவிர்க்க இயலாது. இந்நிலையிலும் இறைவனைப் பற்றிப் போற்றி வாழ வேண்டும்.
இளமை மகிழ்வானது. ஆனால் நிலையானதல்ல. முதுமை வருத்தமானது. அதுவும் நிலையானதல்ல. ஆனால் இரண்டையும் நிலையானது என்று கருதுபவர்கள் இளமையை இழக்கும்போழுது வேதனையுற்றும் முதுமை அடையும் பொழுது வருத்தமுற்றும் துயருறுகின்றனர். இந்நிலைக்குக் காரணம் என்ன? பற்றற்றான் பற்றினை இளமையிலிருந்து பற்று வைத்து பற்றாததே. பற்றை இறைப் பொருளின் மீது பாதிக்காது வாழ்வுப் பொருளின் மீது பதியவைத்ததே வாழ்க்கையின் எல்லா நிலையிலும் துன்பம் கப்பிக் கொள்ளக் காரணமாகிறது. இதனை நன்குணர்ந்த ஞானசம்பந்தர் துயரமில்லா வாழ்வு வாழ இறைவனைப் பணிதல் வேண்டும் என்கிறார்.

" எனழிந்த வாழ்க்கையை இன்பம் என்றிருந்து நீர்
மானழிந்த மூப்பினால் வருந்தான் முன்னம் வம்மினோ" (பா.௭) என்றும்

" மற்றி வாழ்க்கை மெய்யேனும் மனத்தினைத் தவிர்ந்து நீர்
பற்றி வாழ்மின் சேவடி பணிந்து வந்தேழுமினோ" (பா.௮) என்றும்

ஞானசம்பந்த பெருமான் அறிவுறுத்துகின்றார்.

எனவே உலக இன்பங்களில் பற்றுடன் மூழ்காது எச்செயல்களையும் இறைவன் அருளே என நினைந்து இளமை, பொருள், யாக்கை நிலையாமையை உணர்ந்து வாழ்வோமானால் முன்னைப் பாவமானது தானழிந்து இம்மையில் இன்பநிலை அடையலாம் என்பது உறுதி.

இதழ்: 'சிவ சிவ' மார்ச் ௨00௨

No comments:

Post a Comment